Thursday, September 10, 2009

இனம் தின்னும் ராஜபக்சே

சொந்த நாய்களுக்குச்சொத்தெழுதி வக்கும் தேசங்களே!
ஓர் இனமேநிலமிழந்து நிற்கிறதேநிலம் மீட்டுத்தாருங்கள்பூனையொன்று காய்ச்சல் கண்டால்மெர்சிடீஸ் கார் ஏற்றிமருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!
ஈழத்து உப்பங்கழியில்மரணத்தை தொட்டுமனித குலம் நிற்கிறதே!
மனம் இரங்கி வாருங்கள்!
வற்றிய குளத்தில் செத்துக்கிடக்கும்வாளை மீனைப்போல்உமிழ்நீர் வற்றிய வாயில்ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடுரொட்டி ரொட்டியென்றுகைநீட்டிம் சிறூவர்க்குக்கை கொடுக்க வாருங்கள்!

தமிழச்சிகளின் மானக்குழிகளில்துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்சிங்கள வெறிக் கூத்துக்களைநிரந்தரமாய் நிறுத்துங்கள்!வாய்வழி புகட்டிய தாய்ப்பால்காதுவழி ரத்தமாய் வடிவது கண்டுகண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்கண்ணீரை மாற்றுங்கள்!

அடுக்கிவைத்த உடல்களில்எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடிஅடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்குஅழுதுதொலைக்கும் பிள்ளைகளின்அவலக்குரல் போக்குங்கள்!
எனக்குள்ள கவலையெல்லாம்இனம் தின்னும்ராஜபக்சே மீதல்லஈழப்போர் முடிவதற்குள்தலைவர்கள் ஆகத்துடிக்கும்தலையில்லாப் பேர்வழிகள் மீதல்லஎம்மைக்குறையாண்மை செய்துவைத்தஇறையாண்மை மீதுதான்குரங்குகள் கூடிக்கட்டமுடிந்த பாலத்தைமனிதர்கள் கூடிக்கட்டமுடியாதா?

போரின் முடிவென்பதுஇனத்தின் முடிவல்லஎந்த இரவுக்குள்ளும்பகல் புதைக்கப்படுவதில்லைஎந்த தோல்விக்குள்ளும்இனம் புதைக்கப்படுவதில்லைஅழிந்தது போலிருக்கு அருகம்புல்ஆனால்கண்ணுக்குத் தெரியாத வேர்கள்அங்கேசிந்திய துளிகள்சிவப்பு விதைகள்ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்பீரங்கி ஓசையில்தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்ஈழப்பனைமரத்தில்என்றேனும் கூடுகட்டும்


நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி

(மின்னஞ்சலில் பெற்றேன்)